Wednesday 1 August 2012


குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும் என்று, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், "குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும். இதனால், தேர்தலில் நிற்பவர்கள் தோற்பார்கள் என்பது கருத்தல்ல. குடியரசுத் தலைவரால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே எங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறோம்.
  
அதிமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. எந்த நலத் திட்டங்களும் ஒழுங்காக மக்களை சென்று அடைவதில்லை. எனது பிறந்தநாளில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது மக்களுக்காக சில நலத்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறேன்" என்று கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

No comments:

Post a Comment