Tuesday 31 July 2012

அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.


தமது ஆதராவாளர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
   அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சாதகமாக செய்திகள் வெயிடவில்லை என்று அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் சிலர் பத்திரிகையாளர்களைத் தாக்கிய சம்பவம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து தமது ஆதரவாளர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட அன்னா ஹசாரே, இத்தாக்குதலுக்கு அவர்கள் சார்பாக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது ஆதரவாள்களை வன்முறையில் இறங்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
     "அரசு தரப்பில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் தயாராக இல்லை, அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். அரசியல் வாதிகளின் ஊழல் நாட்டை சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்" என்று அன்னா ஹசாரேவின் குழுவினரான சாந்தி பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புது தில்லி : சமீபத்திய தீடீர் மின் தடையை தொடர்ந்து இன்று தீடீரென்று இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு செல்லும் மின்சார கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 19 மாநிலங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி, அஸ்ஸாம், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் மின் தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரயில்கள் மின் தடையால் இயங்க வழியின்றி அப்படியே நிற்கின்றன. தில்லி சாலைகளில் சிக்னல்கள் வேலை செய்யாததால் போக்குவரத்தை சமாளிக்க 4000 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சப்தர்ஜங்க் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு உடனடி முயற்சி எடுத்து பூடானிலிருந்து மின்சாரம் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளனர். தில்லி மெட்ரோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் இயக்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் நிற்கின்றனர். உடன் மின்சார இணைப்பு கொடுக்கப்பட தாம் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் சுஷில் குமார் சிண்டே தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment