Saturday 14 July 2012

சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை கருணாநிதியின் குற்றசாட்டுக்கு தமிழக அரசு பதில்


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்துகொண்டிருக்கிறது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பட்டிருக்கிறது. அதோடு, 1851 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பில் இருப்பதாகவும்,மேலும்  போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஏரிகளின் சீரமைப்புப் பணி, மற்றும், திருவள்ளூரில் புதிய நீர்தேக்க ஏரிகள் அமைக்கும் பணி நடப்பதாகவும், சோழவரம் ஏரியை ஆழப் படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment