Saturday 14 July 2012

கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை

ஜகதீஷ் ஷட்டர் நேற்று புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டபின்னும்,
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. உடுப்பி மாவட்ட எம் எல் ஏ, ஸ்ரீனிவாச ஷெட்டி மூலம் மேலும் குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.
     
ஜகதீஷ் ஷட்டர், முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டபின், ஸ்ரீனிவாச ஷெட்டிக்கு, மந்திரி பதவி கொடுப்பதாக தலைமை பாஜக அறிவித்திருந்ததாகவும், ஆனால், புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகள் பட்டியலில் ஸ்ரீனிவாச ஷெட்டியின் பெயர் வாசிக்கப் படவில்லை என்று தெரிந்ததுமே, ஷெட்டி கதறி அழுதுவிட்டதாகவும் தெரிகிறது.
     
தனது தொகுதியில் நலத்திட்டங்களை நல்லபடியாக செய்து வந்ததால்தான், தான் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், அப்படிப்பட்ட தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை, எப்படி நான் எனது தொகுதி மக்களின் முகத்தில் விழிப்பேன் எனக் கூறி, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டுத்தான் திரும்ப ஊருக்கு செல்வேன் என்றும் ஸ்ரீனிவாச ஷெட்டி காத்திருப்பதாகத் தெரிகிறது.
     
இதற்கிடையில், ஸ்ரீனிவாச ஷெட்டி தொகுதி மக்கள் நேற்று முதலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் கடை அடைப்பு போன்ற எதிர்ப்புக்கள் இன்று நடந்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இவரைப்போலவே குமாரசாமி எம் எல் ஏ போன்ற 4 எம் எல் ஏ க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று கூறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆளுனரை சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment