Thursday 2 August 2012

தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயில் விபத்து:விசாரணை தீவிரம்


கடந்த திங்கட்கிழமை, அன்று நடந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு, மின்கசிவு காரணமில்லை என சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து இது நாசவேலை காரணாமாக ஏற்பட்ட சம்பவமா எனும் கோணத்தில் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் 20 வது இருக்கை எண்ணிலிருந்து 41 வது இருக்கைவரை முதலில் தீப்பிடித்தது என தெரிவிக்கப்படும் போதும், அங்கு செல்போன் சார்ஜ் போடும் வசதிகள் ஏதும் பொருத்தியிருக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மின்கசிவு காரணாமாக ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்திருந்தாலும், ஒரு சில நிமிடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுடன், உடனடியாக அனைவரையும் எரித்துச்சாம்பலாக்கும் வீரியம் உருவாக்கியிருக்காது என சந்தேகிக்கப்படுகிறது.

தீப்பிடித்த பெட்டிக்குள் ஏதேனும் அபாயகரமான வெடி மருந்துகள் யாரேனும் பெட்டிக்குள் வைத்திருந்து அது சிறு வெப்ப அழுத்தத்தினால் தீப் பிடித்து விபத்தாக மாறியிருக்கலாம் என்கிற கோணத்தில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

தீப்பிடித்து எறிந்த ரயில் பெட்டியில் முன்பதிவு செய்தவர்கள் பலரும் அன்று பயணம் செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த முன்பதிவு இருக்கைகளை டிடிஆர் வேறு சிலருக்கு ஒதுக்கிக் கொடுத்ததாகவும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண்ணிக்கைகளுக்கு அதிகமாகவே பயணிகள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி அவசரமாக டிக்கெட் வாங்கிப் பயணித்தவர்கள் பற்றி டிடிஆரையும் விசாரிக்கும் பொருட்டு தனிமையில் அவர் விசாரிக்கப் பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதில் யாரேனும் இந்த நாசவேலையில் ஈடுபட்டனரா எனும் கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.

எதிர்பாராது வைத்திருந்த வெடி மருந்தா, அல்லது நாசவேலை காரணமாக வெடி மருந்து வைக்கப் பட்டதா என்பது போகப்போக விசாரணையில் தெரிய வரும் என்றாலும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண் 20 , 41 க்கு இடையில் பெரிய ஓட்டை இருப்பதால் ஏதேனும் வெடிபொருட்களால் ஏற்பட்ட விபத்தாகத்தான் இருக்கும் என்பது தெரியவருவதால், நாசவேலை காரணமா என்கிற ரீதியில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிகிறது

No comments:

Post a Comment