Wednesday 1 August 2012

நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிகைப்பற்றியது


இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 251 ஓட்டங்களை எடுத்தது. குமார் சங்ககார இப்போட்டியில் விளையாடவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க 51 ஓட்டங்களையும். திரிமனே 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். பந்து வீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. விராத் கோலி 128 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா 58 ஓட்டங்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சுரேஷ் ரைனா இத்தொடரில் எடுத்த மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். விராத் கோலி இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி ஆகஸ்டு 4ம் திகதி நடக்கவிருக்கிறது.

No comments:

Post a Comment