Thursday 2 August 2012

புனேயில் அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு


புனே நகரில் நேற்று புதன்கிழமை 5 இடங்களில் அடுத்தடுத்து ஐந்து குண்டுகள் வெடித்துள்ளன. 6வது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் உள்துறை அமைச்சராக (Home Minister) சுஷில் குமார் ஷிண்டே பதவி ஏற்றதன் பின்னர் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றுக்குச் செல்லவிருந்த திட்டத்தை இவர் கைவிட்டார்.

போலிஸாரின் கவனத்தை திருப்புவதற்காகவும், பயம்காட்டுவதற்காகவும் வேண்டுமென்றே இக்குண்டுத்தாக்குதல்கள் திட்டமிட்டு  மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டுகள் பெரிதாக ஆபத்தானவையல்ல. அதிகளவு சக்தியில்லாத குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

புனே நகரின் மிகவும் பிஸியான ஜுங்க்லீ மஹாராஜ் வீதியில் இக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சாலையோர  குப்பைத் தொட்டியின் அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும், அடுத்து டெக்கான் சாலை, இதனை அடுத்து கந்தர்வா திரை அரங்கம் அருகில் என்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நியூடெல்லி மற்றும் மும்பையிலிருந்து புனே நகருக்கு விரைந்துள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு பெப்ரவரியில் புனே நகரிலுள்ள ஒரு பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 9 பேர் பலியாகியும் 57 பேர் படுகாயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், மத்திய அரசுக்கு ஒரு அபாய அறிவிப்பு, இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக  தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment