Wednesday 8 August 2012

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல, தொடர்ந்து  இரண்டாவது முறையும் வெற்றி பெற்ற பெருமை பெறுகிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பாக குடியரசுத் துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட தற்போதைய குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி, எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார். பதிவான 790 வாக்குகளில் 490 வாக்குகள் அமீத் அன்சாரிக்கும், 238 வாக்குகள் ஜஸ்வந்த் சிங்குக்கும் விழுந்திருக்கிறது. இதில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகள்.
     
இதனால் அமீத் அன்சாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. எதிர்வரும் 11ம் திகதி அமீத் அன்சாரி பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாகவும் டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 1937 இல் பிறந்த அமீத் அன்சாரி 2 முறை டாக்டர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய வெளியுறவு பணியாளராக பலநாடுகளிலும் சிறப்பாக செயலாற்றியவர் அமீத் அன்சாரி என்பதும், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற துணைக் குடியரசுத்  தலைவர் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment