Thursday 2 August 2012

தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள்அன்னா ஹசாரே,


மக்களின் நலனுக்காக மாற்று அரசியல் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரே நாளை மாலை தங்கள் குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இன்று முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தனர்.

அந்த கடிதத்தை அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத மேடையில் ஹிந்தி நடிகர் அனுபம்கெர் வாசித்தார். அந்த கடிதத்தில் உங்களின் இந்த உணர்வுக்கு மத்தய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. ஆனால், உங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், மக்களுக்கு நன்மை கிடைக்க வழியில்லை. எனவே உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டிருப்பதை அனுபம்கெர் வாசித்தார்.

இதை அடுத்து அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இந்த உண்ணாவிரதம் மாலை முற்றுப் பேரும் என்றாலும், மாற்று அரசியலை உருவாக்கி தீருவேன் என்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் பேசியிருக்கிறார்.

இந்த மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இரண்டு வருடங்கள் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

.

கடைசியாக அரசியலில் மக்கள் மாற்று அரசியலை விரும்புவதால், தான் மாற்று அரசியல் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் அன்னா ஹசாரே ஜந்தர்மந்தரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment