Thursday 2 August 2012

டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆதரவு அளிக்கவேண்டும்: கருணாநிதி


ஈழத் தமிழர்களின் காயத்திற்கும், துன்பத்திற்கும் மருந்து போடும் விதமாகத்தான் டெசோ மாநாடு நடத்த இருக்கிறோம்.
எனவே டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தை புரிந்து கொண்டு, மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
  
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக நடத்தப் படும் மாநாட்டில் சரத் பவார், சரத் யாதவ் போன்ற பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் பலரும் பல நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து இணையதளத்தில் தொடர்பு கொள்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி உயர்த்த இந்த டெசோ மாநாடு வழிவகை செய்யும் என்று தான் நம்புவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment