Wednesday 15 August 2012

11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்முதல்வர் ஜெயலலிதா

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இன்று காலை அவர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகையிலேயே அவ்வாறு குறிப்பிட்டார். முதல்வர் கொடியேற்றி வைத்ததைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் பின் உரையாற்றுகையில், இன்றைய சுதந்திர நன்நாளில், சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். நாட்டின் 66வது சுதந்திர தினத்தில் 12வது முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது, சுதந்திரத்துக்காக அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment