Thursday 9 August 2012

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்குஅழைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டு 2012 ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி 150வது ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் நேற்று மதியம் போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்

No comments:

Post a Comment