Wednesday 1 August 2012

டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை

சி‌‌‌கி‌ச்சை‌க்கு வ‌ந்த இள‌ம்பெ‌ண் ஒருவரை ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை மதுரையில் ‌நட‌ந்து‌ள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ரிஷபம் கிராமத்தை சேர்ந்த ‌பிள‌ஸ் 2 மாண‌வி உமா (பெயர் மாற்ற‌‌ம்), நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட உமாவை பெ‌ற்றோ‌ர் ஊரு‌க்கு அழை‌த்து வ‌ந்தா‌‌ர்.

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌க்கு உமாவை அவரது தாத்தாவும், மாமாவும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். உமாவை பரிசோதனை செய்த டாக்டர் சங்கரநாராயணன் (52), டைபாய்டு காய்ச்சல் போல இருப்பதால் 3 நாட்களுக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறியு‌ள்ளா‌ர்.

இதனா‌ல் உமாவு‌க்கு காலையும், மாலையும் மரு‌த்துவமனை‌யி‌ல் குளுக்கோஸ் ஏற்றி ‌வீ‌ட்டி‌ற்கு அழைத்துச்சென்று வ‌ந்து‌ள்ளனர் தாதாவு‌ம், மாமாவு‌ம். நேற்று முன்தினம் மாலை உமாவு‌க்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தது. அ‌ப்போது, தாத்தாவும், மாமாவும் பழங்கள் வாங்குவதற்காக வெளியே சென்று‌வி‌ட்டன‌ர்.

அப்போது உமா அறை‌க்கு வ‌ந்த டாக்டர் சங்கரநாராயணன் உடல்நிலை குறித்து விசாரித்து‌ள்ளா‌ர். அப்போது வயிற்றுப்பகுதியில் வலிப்பதாக கூ‌‌‌றி‌யி‌க்‌கிறா‌ர் உமா. வயிற்றுப்பகுதியை கையை வை‌த்து ப‌ரிசோ‌தி‌‌த்த டாக்டர், திடீரென்று உமா ‌மீது பா‌ய்‌ந்து அவரை க‌ற்ப‌ழி‌த்து‌வி‌ட்டா‌ர்.

அல‌றி துடி‌த்த உமா‌வை ‌வி‌ட்டு‌வி‌ட்டு ஓடிய டா‌க்ட‌ர், ''உறவினர்களிடம் சொ‌ன்னா‌ல் கொலை செய்து விடுவேன்'' எ‌ன்று மிரட்டிவிட்டு வீட்டிற்கு செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

ப‌ழ‌ம் வா‌ங்‌கி‌வி‌ட்ட வ‌ந்த தா‌த்தா, மா‌மா‌விட‌ம் தன‌க்கு நே‌ர்‌ந்த கொடுமையை கூ‌றியு‌ள்ளா‌ர் உமா. இதனா‌ல் கொ‌‌தி‌த்தெழு‌ந்த உமா‌வி‌ன் தா‌த்தாவு‌ம், மாமாவு‌ம், ம‌ருத‌்துவமனை முன்பு ‌நி‌ன்று டா‌க்டரை வசைபாடியு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ன் கூ‌ச்சலை கே‌ட்டு அ‌க்க‌ம் ப‌க்க‌த்‌தின‌ர் கூ‌டின‌‌ர். ‌விப‌ரீத‌ம் அ‌திக‌ரி‌க்கவே டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌வீ‌‌ட்டை பூ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

மரு‌‌த்துவமனை‌யி‌ல் இள‌ம்பெ‌ண் க‌ற்‌ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட சம்பவம் கா‌ட்டு‌த்‌தீ போ‌ல் பர‌வியதா‌ல் எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். டாக்ட‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற போ‌லீசா‌ர் அவரை வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் ச‌ங்கரநாராயண‌ன் வெளியே வராததால், கதவை உடைத்து கொ‌ண்டு போ‌லீசா‌ர் உ‌ள்ளே புகு‌ந்து அவரை கைது செ‌ய்தன‌ர்.

பிடி‌ப்ப‌ட்ட காமவெ‌றி டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌மீது கற்பழித்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செ‌ய்ய‌ப்ப‌ட்டது. கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட டா‌க்டரை மதுரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி மா‌‌ரீ‌‌ஸ்வ‌ரி‌யிட‌ம் போ‌லீசா‌ர் ஆஜர்படுத்தினர்.

வரு‌ம் 14ஆ‌ம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்ட ‌நீ‌திப‌தி‌யிட‌ம், தான் டாக்டர் என்பதாலும், வருமான வரி செலுத்துபவர் என்பதாலும் தன்னை சிறையில் முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் கேட்டு‌ள்ளா‌ர்.

சிகிச்சைக்கு வந்த சிறுமியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பிரிவு வழங்க ‌‌நீ‌திப‌தி மறு‌த்து‌வி‌ட்டா‌ர். இதையடுத்து கைதிகளுடன் சிறையில் டாக்டர் சங்கரநாராயணன் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மதுரை பெரிய மரு‌த்துவமனை‌யி‌ல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்ப‌ட்டது.

சி‌க‌ி‌ச்சை‌க்கு வ‌ந்த ஒரு பெ‌ண் நோயா‌ளி‌யிட‌ம் காமவெ‌றி ‌பிடி‌த்த டா‌க்ட‌ர் இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டது டா‌க்ட‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ‌ஒரு பு‌னிதமாக மரு‌த்துவ தொ‌ழி‌ல் இ‌ப்படி‌ப்ப‌ட்ட டா‌க்ட‌ர்களா‌ல் கெடுவது வேதனையாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறது

No comments:

Post a Comment