Friday 15 June 2012

பிரணாப் ஜனாதிபதி ஆகிறார் !!!



நேற்று புது டில்லியில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் ஒருனித்த கருத்தாக பிரணாப் முகர்ஜி  ஜனாதிபதி வேட்பாளராக முடிவு செய்ய பட்டார் . இம்முடிவை நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்து சோனியா அறிவித்தார். 

பிரணாபை பற்றி :

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் ஆசிரியராக பணி செய்தவர். மிக கண்டிப்பாகவும் கட்டுகோப்பாகவும் எதிலும் இருக்க விரும்புவர். எதையும் பளிச்சென்று பேசிவிடுவார். நேர்மையும் ஒழுக்கமும் ஒருநிலையாக திகழ்பவர் பிரணாப் என எல்லோரும் கூறுவர். அறிவியல் வரலாறு போன்றவற்றில் மிகுந்த திறமை உடையவர். பல வரலாற்று நிகழ்வுகளை மிகசெரியாக தொகுப்பார். கூர்மையான நினைவாற்றலை கொண்டவர் , நடைமுறையில் எது சாத்தியம் என பார்த்து அணுகுவார்.

அரசியல் வாழ்க்கை :

இவரது தந்தை மேற்கு வங்காள மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருந்தார். பிரணாபின் அரசியல் வாழ்க்கை 1969 இல் ராஜ்ய சபாவிலிருந்து தான் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 35 வருடங்கள் ராஜ்ய சபா எம் பியாக இருந்தார். பின்பு 1973  ஆம் ஆண்டு தொழில்துறை அமைச்சராக பணி புரிந்தார். 2 வருடங்கள் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக வேலை பார்த்துள்ளார். பற்பல துறைகளில் அமைச்சர் குழுக்களுக்கு தலைவராக இருந்துள்ளார். 87 -89 காங்கிரஸின் பொருளாதார ஆலோசனை பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

பிரணாபின் சாதனைகள் அரசியல் வாழ்விலும் நடைமுறையிலும் எண்ணற்றவை. அவருக்கு இருக்கும் வலுவான தகுதி அவரை வெற்றி காண வைக்கும் என நாம் அவரை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment