Sunday 17 June 2012

தனியாரிடம் இருந்து மின்சாரம் பெற்றால் மேலும் கட்டணம் உயருமா ??

மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தனியார் நிருவனகளில் இருந்து மின்சாரம் பெற முடிவு செய்துள்ளது, இந்த முடிவால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் அதிகம் ஏற்படும். இந்த நஷ்டத்தை சரிகட்ட சில மடங்குகள் கட்டணத்தை உயர்த்திவிட்டால் , பயனர்களுக்கு இது மேலும் பெரிய சுமையாக அமைந்து விடும். இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பது தான் உண்மை.

11000 மெகாவாட் தேவை அனால் 8000 வாட் மட்டுமே உற்பத்தி ஆகின்றது. 2500 மெகாவாட் பற்றாக்குறை நீடித்து வருகிறது. அனால் , பல இடங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி விட்டதால், மழை ஏமாற்றினாலும், காற்று நன்றாக வீச தொடங்கி உள்ளது. அதிலிருந்து மின்சாரம் சுமார் 3000 மெகாவாட் வரை கிடைப்பதால் இப்பொழுது சில இடங்கள் மின் வெட்டு நேரங்களை கம்மியாக சந்திக்கின்றன.

சில இடங்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளி மாநிலங்களிடம் இருந்தும், மின் வாரியம் வாங்கி வருகிறது,.

இப்போது 2012-13-ம் ஆண்டு மின் தேவையைக் காரணம் காட்டி வெளி மாநிலங்களிலிருந்து 1,079.8 மெகாவாட், தமிழகத்தைச் சேர்ந்த பிற தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 683.3 மெகாவாட், ஒப்பந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து 420 மெகாவாட் என மொத்தம் 2,183.1 மெகா வாட் மின்சாரத்தை ரூ.13,175 கோடிக்கு வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.

பல வெளிமாநில மின்சார வாரியங்கள், எல்லை பகுதிகளில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ 4 க்கு விற்க முன்வந்துள்ளனர். அனால் தனியார் நிறுவனங்கள் ரூ 6 க்கு விற்கின்றன. 
தனியார் நிறுவனங்கள் கோரியபடி 683.3 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 6.30 என்ற விகிதத்தில் வாங்கினால், அவர்களுக்கு மின் வாரியம் ரூ.4304.79 கோடி கட்டணம் செலுத்த வேண்டி வரும்.  இந்த மின்சாரம் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் மின் இழப்பையும் கணக்கிட்டால், இந்த 683.3 மெகாவாட் மின்சாரத்தின் விலை பயனீட்டாளர்கள் முனையில் ரூ.7,662.53 கோடியாக உயரும்.

மின்சார திட்டங்கள் பல தொடங்கபடாமல் உள்ளதால், மின் உற்பத்தி  செய்யபடாமல் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், மேட்டூரில் தொடங்க வேண்டிய மின்சார உற்பத்தி 600 வாட் கொடுக்கும் இந்த ஜூன் இல் என எதிர்பார்த்தது, அனால் அது செப்டெம்பரில் தான் தொடங்கும் என தெரிகிறது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டு இருக்கிறது. இல்லையேல், வாங்கும் மின்சாரத்திற்கு கட்டணம் உயர்ந்தால், பயனர்கள் மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாமல் திணறிபோய் விடுவார்கள்.



No comments:

Post a Comment