Sunday 17 June 2012

ஸ்டெம் செல் சிகிச்சை

ஸ்டெம் செல் என்னும் முறையின் மூலம் பல சிகிச்சைகள் வெற்றி பெற்று வருகின்றன. சுசித்ரா ஹோல்கர்சன் என்ற ஒரு மருத்துவர் சுவீடன் நாட்டு சிறுமியின் ரத்த நாளத்தை வளர்த்து அதை பொருத்தி சிகிச்சையை வெற்றி பெற செய்துள்ளார். உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் இவர் மிகவும் அனுபவம் உடையவர்.

பத்து வயது சுவீடன் நாட்டு சிறுமிக்கு கல்லீரலின் ரத்த நாளங்கள் நாசமானதால், அவருக்கு ரத்தநாளங்களை புதிதாக பொருத்தும் எண்ணம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. சிறுமியின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்தால் பருவ வளர்ச்சி செரியாக ஏற்படாமல் போகலாம் என கருதி உறுப்புகளை தானம் செய்தவரின் உடலில் இருந்தே நாளங்களை எடுத்து அந்த செல்களை அகற்றிவிட்டு இந்த சிறுமியின் உடலுக்கு ஏற்றாற்போல் அதனை  வடிவமைத்து
அடை காக்கும் கருவியின் மூலம் அதனை வளர்த்து சிறுமியின் உடலில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பொருத்தினர். அவர் இப்பொழுது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அனால் இந்தியாவில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு மிக மிக குறைவு. நிறைய மருத்துவர்களுக்கு அதைப்பற்றி சரியான கண்ணோட்டம் இல்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏற்றார் போல் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அதற்கு தேவையான வசதிகள், படிப்பு மற்றும் கருவிகள் இந்தியாவில் இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. குழந்தைகளின் ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். பல ரத்த வங்கிகள் இதை பணம் வாங்கிகொண்டு செய்கின்றன. அதை இன்கிபடோரில் வைத்து அந்த ரத்ததை காத்து ஸ்டெம் செல்களையும் காக்கின்றனர்.

அனால் மருத்துவ கவுன்சிலின் படி எந்த தெளிவான முடிவும் இப்பொழுது செரியாக எடுக்கப்படவில்லை. சில நேரங்களில் தொப்புள்கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தநாளங்கள் கேட்டு போய்விடுங்கின்றன. இதை தடுக்க வேண்டும் , அப்படி நடந்துவிட்டால் அதனை சரி செய்வதற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அரசு முடிவு செய்ய வேண்டும்.

இந்த ஸ்டெம் செல் சிகிச்சை நல்லதொரு வரம் இந்த மனிதகுலத்திற்கு. இதனை மிகுந்த பொறுப்புடனும் , கடமையுடனும் மருத்துவர்களும், ரத்த வங்கிகளும் ஏற்று சரியாக செய்ய வேண்டும் என்பது இந்த சிகிச்சைக்கு வைக்கப்படும் முக்கியமான நிபந்தனை.

No comments:

Post a Comment