Monday 14 January 2013

தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல்


தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல் இன்று (திங்கட்கிழமை) உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத்தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

அறுவடை காலத்தில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடும் வழக்கம் தமிழில் சங்ககாலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தமது அறுவடையின் முதற்பயனை கதிரவனுக்கு படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது என்பதே தமிழன் பண்பாடு என்பது இவ்விழாவின் மூலம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மூன்று தினங்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் (நேற்று) மார்கழி கடைசி நாள் என்பதால் அந்நாளில் பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கமாகும். இதனை போகி பண்டியைகாக கொண்டாடுவார்கள். நாளை (செவ்வாய்க் கிழமை) மாட்டுப்பொங்கலும், நான்காம் நாள் காணும் பொங்கல் (உறவினர்களை சந்தித்து அன்பையும், உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளல்) நடைபெறுகிறது.

No comments:

Post a Comment