Sunday 27 January 2013

அமைச்சர், சல்மான் குர்ஷித்தையும், டெசோ குழு, சந்திக்கிறது.


ஐ.நா சபையிடம் கையளிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை அடுத்த கட்டமாக ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடம்  டெசோ அமைப்பு கையளிக்கவுள்ளதாகவும்,  இதற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்கள், டில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு செல்வதாகவும் திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து, டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை, இலங்கை அரசு செயல்படுத்த, ஐ.நா., சபை வலியுறுத்த வேண்டும் என, தீர்மான நகல்களை ஐ.நா., சபையிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான இருவர் குழு அளித்தது.

அடுத்தகட்டமாக ஐ.நா, சபைக்கு, அதன் உறுப்பு நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, டில்லியில் உள்ள, 47 நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று, டெசோ தீர்மானங்களை அதன் உறுப்பினர்கள் அளிக்கவுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தையும், டெசோ குழு, நாளை மற்றும் நாளை மறுநாள் சந்திக்கிறது.

இலங்கையில் புனரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும், இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் தூதர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment