Monday 14 January 2013

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்


முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியீட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில் :

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்தோடு பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் ஆகும்.

வள்ளுவர் குறளுக்கு ஏற்ப உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' என மனமார வாழ்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment