Friday 15 June 2012

ஏ டி எம்மில் புதிய மென்பொருள்

ஏ டி எம் ( தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரம் ) பணத்தை எங்கிருந்தும் எடுக்க மிகச்சிறந்த வழி. இது எளிமையான பயன்பாடு கொண்ட ஒரு இயந்திர வகை. ஆடோமடேட் என கூறப்படும் ஏ டி எம்கள் உள்ளே பணம் எடுக்க சில கேள்விகளை கேட்கும். ஏ டி எம் கார்டின் பின் நம்பர் அடித்தால் போதும் , எவ்வளவு பணம் எடுக்க வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கொள்ளலாம். அதை சரியாக நாம் குறிப்பிடவேண்டியது தான்.

அனால் இதிலும் பல முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஏ டி எம்மில் சில நேரங்களில் கார்டு மாடிகொள்ளும் அல்லது பணமே வெளியே வராது, அனால் வங்கி கணக்கில் பணம் குறைவது, ரசீது கிடைக்காமல் போவது  போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண புதியதொரு தொழில்நுட்பத்தை புகுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சில நேரங்களில் பின் நம்பரை என்டர் செய்த பின் , பணம் வராமல் போகலாம். பல மக்கள் பணம் மெசினில் இல்லை என்று நினைத்துகொண்டு போய்விடுவர். அனால், அடுத்த நபர் வந்து தனது பின்னை ஓபன் செய்தால் முந்தைய நபரின் பணம் இவருக்கு வரும். இது போன்ற இன்னல்களை தடுக்க வங்கி நிறுவனங்கள் சேர்ந்து ஒரு முடிவு செய்து புதிய மென்பொருளை செட் செய்துள்ளனர்.

அதாவது கார்டை உள்ளே செலுத்திவிட்டு, 6 நிமிடங்கள் மட்டுமே ஒருத்தருக்கு வழங்கப்படும். அதற்குள்ளே பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த நடவடிக்கை ரத்தாகி விடும். இதன் மூலம் நாம் பெரிய அளவில் பணம் தேவையில்லாமல் வங்கி கணக்கிலிருந்து போவதை நன்றாக தடுக்கலாம். இதை பெரிய கிளைகளில் முதலில் அமல் படுத்திவிட்டு , பின்பு சிறிய ஏ டி எம் சென்டர்களில் கொண்டுவர முடிவு எடுக்க பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment