Wednesday 24 October 2012

தமிழக அரசின் மின் தேவைபரிசீலிக்கப்படும்மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால்

தமிழக அரசின் மின் தேவை குறித்து முதல்வரின் கடிதம் பரிசீலிக்கப்படும் என மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் மின்சார சேவை கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் மத்திய அரசு தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு குறித்து அறிந்துள்ளது,  இது தொடர்பாக தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ள வேணுகோபால் மின்சாரம் வரும் வழித்தடங்களில் சில பிரச்னைகள் இருப்பதாலே தமிழகத்துக்கு மின் தட்டுப்பாடு பிரச்சனை இருப்பதாகவும் 2014க்குள் இவை அனைத்தும் சீர்செய்யப்பட்டு மின் வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும் எனவும் கூறியிருப்பதாக தெரிகிறது. கூடங்குளம் உற்பத்தியில் தமிழகத்திற்கான மின்சார ஒதுக்கீடு குறித்து, மத்திய அரசே முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment