Tuesday 23 October 2012

முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.

திடீரென்று மதுரை சென்று, தனது சகோதரர் முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.
விபரம் கேட்டபோது கூற மறுத்து விட்டதாக தெரிகிறது.

முக அழகிரியை சந்திப்பதற்காக ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மதுரைக்கு சென்றிருந்ததாக தெரிகிறது. இருவரும் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றி உள்ளனர். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மீதான புகார் குறித்தும் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளது குறித்தும் பேச்சுவாரத்தை நடத்தியிருப்பார்கள் என்று பலரும் கணித்தாலும் சந்திப்பிற்கான காரணத்தைக் கூற ஸ்டாலின் மறுத்து விட்டதாகத் கூறப்படுகிறது.

மாறாக, அதிமுக எம்பி தம்பிதுரை மீதான நில மோசடி வழக்கை ஜெயலலிதா தலைமையிலான காவல்துறையினர் விசாரிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கிரானைட் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, தொடர்ந்து தலைமறைவில் இருக்கும் துரை தயாநிதியை பற்றி தெரிந்து கொள்ள, தனிப்படையினர் நேற்று நடிகர் மகத்திடம் விசாரணையைத் துவக்கி உள்ளனர் என்று தெரிகிறது. மங்காத்தா படத்தில் நடித்து இருக்கும் நடிகர் மகத் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் என்றும், இதன் காரணமாகவே மகத்திடம் காவல்துறை தனிப்படையினர் விசாரணையைத் துவக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment