Tuesday 23 October 2012

சின்மயி விவகாரம் : சமூக வலைத்தளங்களால் ஒருவர் கைதாவது இதுவே முதன்முறை?

தென்னிந்திய பாடகி சின்மயி பற்றி டுவிட்டர் மூலம் அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்மயின் புகாரின் பெயரில் சென்னை மாநகர காவல்துறையினரின் கணிணி குற்றப்பிரிவினர் குறித்த பேராசிரியர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இக்கைது இடம்பெற்றுள்ளது.  இப்பின்னணியில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல்தடவை என கூறப்படுகிறது. 

சமீப காலமாக, அரசியல் பிரபலங்களையும், என்னை போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் உளட்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்துவருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள சின்மயி, இதனால் தன்னை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், குறித்த 6 பேர் கொண்ட கும்பல் தம்மை பற்றி அவதூறு பரப்பலை நிறுத்தவில்லை எனவும் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment