Wednesday 24 October 2012

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று உறுதியானத் தகவல் வெளியாகி உள்ளது.
பலதடவை மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்த முறை கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ந் திகதி திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சரவையில் ரயில்வேத் துறை உள்ளிட்ட 6 அமைச்சரவைப் பதவிகள் காலியாக இருக்கின்றன

மேலும் பல முக்கிய அமைச்சர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த முறை முக்கியமாக சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் தெரிகிறது. அவர் புனித ஹஜ் பயணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதால், இந்த முறை ராஜினாமா செய்து விட்டு புனித பயணம் மேற்கொண்ட பின்னர், 2014 க்கான தேர்தல் கள  கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

ராகுல் காந்தி இந்த முறையும் அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொள்வது சந்தேகமே என்று தெரிகிறது. மாறாக இவர் ஆதரவு பெற்ற இளம் எம்பிக்களுக்கு, இந்த முறை அமைச்சர் பதவி கொடுக்கப் படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment