Friday 7 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்து12பேரை கைது

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்துத் தொடர்பாக போலீசார் 12பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிகிறது.
நேற்று முன் தினம் சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 38 பேர் பலியானதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். விருதுநகர், சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 40பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவ் விபத்துத் தொடர்பாக போலீசார் குத்தகைதாரர் பால்பாண்டி உள்பட 12பேரை கைது செய்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன் தலைமறைவாகிவிட்டதால் அவரை தீவிரமாக போலிசார் தேடிவருகிறார்கள். கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின்பேரில்  இவ் 12பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதே வேளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த விபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி நீதி விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விசாரனையும் இன்றே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில்  பட்டாசு தொழிற்சாலையின் ஆவணங்களை பரிசீலிப்பதுடன் விதிமுறைகள் மீறி செயல்பட்டிருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளதால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருது நகர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து விசாரணை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment